ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஷாலு என்ற பெண் ஜெயலலிதா போல உடை மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தாம் 25 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்