"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில், தருமபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பழனியப்பன் திமுகவில் இணைய வேண்டும் என விரும்பி பலபேர் மூலமாக தூது அனுப்பியதாக தெரிவித்தார். அவர் திமுகவில் இணைந்ததன் மூலம் தர்மபுரி மாவட்டம் வலுவடைந்துள்ளதாக கூறினார்.
Next Story