தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக திருமங்கலம் சூர்யா நகர் பகுதியில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீடுகளில் சிக்கி இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Next Story