அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செய்யூர் பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பின்கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 25 கிலோ வெள்ளி மற்றும் 20 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், கடையில் இருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகைகள் மட்டும் தப்பித்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story