காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.
x
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.


சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜூலியானா. நடிகையான இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனியார் சலூன் கடையில் பணிபுரியும் மனிஷ் என்பவரை கடந்த 2017 முதல் காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால் மனிஷ்க்கு 2 சவரனில் தங்க செயின் உட்பட 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவு  செய்ததாக கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய மதத்தை காரணம் காட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனிஷ் தன்னை திருமணம் செய்ய முடியாது என கூறியதோடு காதலை கைவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டு வருவதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜூலி தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்