தண்ணீர் கலந்த பெட்ரோல் - பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு

திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல்  வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தில் உள்ள  பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர், இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. வாகனத்தை பரிசோதித்த போது, பெட்ரோலுடன் தண்ணீர் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து அவர் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டுள்ளார். தகவலறிந்து போலீசார்
வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்