"பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி" - விடுமுறை கேட்ட மாணவனுக்கு ஆட்சியர் பதில்

விடுமுறை கேட்ட மாணவருக்கு, "பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி" என்று டுவிட்டரில் கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூரிலும் மழை தொடர்வதால், பள்ளிக்கு விடுமுறை வழங்குமாறு ட்விட்டரில் பள்ளி மாணவர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், "தற்போது மழை குறைந்துவிட்டது பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி" என்று கூறியுள்ளார். மேலும், "நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க, நிறைய படிக்க வேண்டி இருக்கு" என்று அவர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்