நோய் தீர்ப்பதாக, நகையை கழற்ற சொன்ன ஆசாமி - கோயிலை சுற்றிவர கூறிவிட்டு, நகையுடன் ஓட்டம்

சொம்பில் நீருடன் கோயிலைச் சுற்றிவர கூறிவிட்டு, இரண்டே முக்கால் சவரன் நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
x
சொம்பில் நீருடன் கோயிலைச் சுற்றிவர கூறிவிட்டு, இரண்டே முக்கால் சவரன் நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் முருங்கப்பாக்கம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஒட்டுனரான 63 வயது தீனதயாளனிடம், தெரிந்தவர் போல் மர்ம நபர் ஒருவர் நலம் விசாரித்துள்ளார். அவரது மனைவியிடமும் பேசியுள்ளார். இருவரும் தங்கள் உடல் உபாதை மற்றும் சிகிச்சை குறித்து கூறியுள்ளனர். அப்போது, தீனதயாளன் மனைவி அணிந்திருந்த நகைகளை சொம்பு தண்ணீருக்குள் வைக்கச் சொன்ன மர்மநபர், கணவன், மனைவியை கோயிலுக்கு அனுப்பிவிட்டு சென்றுள்ளார். அப்போது, தங்க சங்கிலி மற்றும் மோதிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலிஸில் புகாரளித்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்