என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்
x
காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி கடந்த 30 ம் தேதி அவருடைய தாத்தாவின் வீட்டு குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  போலீசார் மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில், கல்லூரி மாணவரான ஸ்ரீராம் என்பவருடன் நெருக்கமான புகைப்படங்கள் இருந்துள்ளன. சமீபத்தில் ஸ்ரீராம் வேறு பெண்ணுடன் பழகி வந்த‌தாகவும் அந்த புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் தன் சாவிற்கு ஸ்ரீராம் தான் காரணம் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்