"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை - நரிக்குறவர் இன மக்கள் வேதனை
x
கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள், வசித்து வருகின்றனர். ஊசி, பாசி, கருகமணி உள்ளிட்டவை விற்று பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர். மழைகாலத்திலும் கூட ஓழுகும் வீடுகளில் வசித்து வருவதாக கூறும் நரிக்குறவ மக்கள், சுகாதாரமான குடிநீர், சாக்கடை வசதி இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்