பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டம் குன்னூரில், விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
நீலகிரி மாவட்டம் குன்னூரில், விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார துறையினர், நகராட்சி ஊழியர்கள் விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, விடுதியில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற 5 பணியாளர்கள் மற்றும் 114 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்