வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
x
தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். வேலூர் அருகே விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், விரிஞ்சிபுரம் மற்றும் மாதனூர் தரைப்பாலங்களை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,  முதற்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து நெடுஞ்சாலை துறைக்கு ஆயிரத்து 444 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும், மழை ஓய்ந்த பிறகே வெள்ள சேதங்கள் குறித்து முழுவதுமாக கணக்கிட முடியும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்