சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
x
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில்,  உள்துறை செயலாளர் பிரபாகர், காவல் துறை உயர் அதிகாரிகள் சைலேந்திர பாபு, சங்கர் ஜூவால்,  தாமரை கண்ணன், டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், சந்தீப் மிட்டல், ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில், சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கை, குற்றச்சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்