தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் மத்தியில் அச்சம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
x
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, பிதர்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில், ஒய்யாரமாக உலா வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த யானை, பகல் நேரங்களில் கிராமப் பகுதியில் நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்