“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகார் குறித்து முறையிட வந்த தங்களை நீண்ட நேரம் காக்க வைத்து விசாரிக்காமல் போலீசார் அனுப்பியதாக வேளச்சேரியை சேர்ந்த ஜெனிபர் மற்றும் மேடவாக்கத்தை சேர்ந்த தனம் உள்ளிட்டோர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ரவுடிபேபி சூர்யாவை கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெனிபர், தனம் உள்ளிட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையரகம் அமைந்துள்ள ஈ.வி.கே சம்பத் சாலையில் அமர்ந்து கதறி அழுதபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தனம் என்பவர், ரவுடிபேபி சூர்யாவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்