"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.
கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி
x
திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், கிரிக்கெட் போட்டிக்கு அடுத்தப்படியாக கராத்தே போட்டி விளங்குவதாக தெரிவித்தார். சிலம்பம் வீரர்களுக்கு வழங்கியதை போல கராத்தே வீரர்களுக்கும் இடஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கராத்தே பயிற்சிக்கு நிரந்தர உள் விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும் என்றும், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கராத்தேவை கற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்