கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்
x
கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனையடுத்து அரியாற்றின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால், வயல்வெளிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்