ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மலைப் பகுதியான தேன்கனிகோட்டை அடுத்த கொல்லப்பள்ளி கிராமத்தில் ஒற்றை யானை நுழைந்தது. கண்டகாணப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, விளை நிலங்களில் சுற்றித் திரிந்தது. பின்னர் அங்கிருந்து, கொல்லப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்த யானை, சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு, வேகமாக சென்றது. யானையை கண்ட மக்கள் அச்சத்துடன் கூடிய நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பாளையம்கோட்டை, அகலக்கோட்டை, மேடுமுத்துக் கோட்டை மற்றும் சுற்றுப் பகுதியினர், பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Next Story