கராத்தே மாஸ்டர், தாளாளரின் பாலியல் தொந்தரவு - கையை அறுத்துக்கொண்ட பள்ளி மாணவி
சேலம் மாவட்டத்தில் பள்ளியின் கராத்தே மாஸ்டர், தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பள்ளியின் கராத்தே மாஸ்டர், தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கின் மர்மம் நீடிக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்வலைகளே ஓயாத நிலையில், சேலம் மாவட்டம் கருமந்துறையில் மற்றொரு பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி கையை அறுத்துக்கொண்டும், தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவிக்கு, பள்ளியின் கராத்தே மாஸ்டரான ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரும், தாளாளர் ஸ்ரீபன் தேவராஜ் என்பவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால், மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து கராத்தே மாஸ்டர் ராஜா, தாளாளர் ஸ்ரீபன் தேவராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story