'கனெக்ட்' கருத்தரங்கில் முதல்வர் உரை
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில், சிஐஐ தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசின் எல்காட் சார்பில் 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தரவு மையங்களில் முதலீடு செய்வதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், ஆயிரத்து 996ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சி செய்தது என்று பெருமிதம் கொண்டார். அரசின் புதிய கொள்கைகள், முன் முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில் நுட்ப மையமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story