காதல் மனைவியை எரித்துக் கொன்ற காதலன்... மாமாவை தீர்த்துக்கட்ட அரிவாளுடன் விரட்டிய மச்சான்

மதுரையில் தன் சகோதரியை காதலித்து கர்ப்பிணியாக்கி பின்னர் அவரை கொடூரமாக எரித்துக் கொன்ற மாமாவை பழிதீர்க்க அரிவாளுடன் துரத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காதல் மனைவியை எரித்துக் கொன்ற காதலன்... மாமாவை தீர்த்துக்கட்ட அரிவாளுடன் விரட்டிய மச்சான்
x
மதுரையில் தன் சகோதரியை காதலித்து கர்ப்பிணியாக்கி பின்னர் அவரை கொடூரமாக எரித்துக் கொன்ற மாமாவை பழிதீர்க்க அரிவாளுடன் துரத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ்ராணி. 20 வயதான இவர் பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவரை காதலித்து வந்தார். இதனிடையே இருவரும் நெருங்கி பழகியதில், கிளாடிஸ் ராணி கர்ப்பமடைந்தார். 

ஆனால் காதலியை கழட்டிவிட திட்டமிட்டார் ஜோதிமணி. ஆனால் கிளாடிஸ்ராணி தன் காதலனை விடுவதாக இல்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெண் வீட்டார் கட்டாயப்படுத்தி கிளாடிஸ் ராணியை ஜோதிமணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். 

விருப்பமில்லாத திருமணத்தால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் ஜோதிமணி. இதனிடையே திருமணமான 2 நாட்களில் 4 மாத கர்ப்பிணியான தன் மனைவியை அவனியாபுரம் அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்து எரித்துவிட்டு தப்பினார். 

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நாட்களில் ஜோதிமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமினில் வெளியே வந்த ஜோதிமணி, தினமும் சோழவந்தான் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். 

சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த அவரை சிலர் அரிவாளுடன் துரத்தவே, உயிருக்கு பயந்து ஜோதிமணி ஓட்டம் பிடித்தார். பின்னர் நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்தார் ஜோதிமணி. 

அப்போது அவரை விரட்டி வந்தவர்கள் தப்பி ஓடவே, அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் ஜோதிமணியால் கொல்லப்பட்ட கிளாடிஸ்ராணியின் சகோதரர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. தன் சகோதரியை கொடூரமாக  கொன்ற ஜோதிமணியை தீர்த்துக்கட்ட வேண்டும் என திட்டமிட்டு கிளாடிஸ் ராணியின் சகோதரர் சத்ய கிளிண்டன் மற்றும் அவரின் நண்பர் அர்ஜூனன் ஆகியோர் அரிவாளுடன் விரட்டியதும் தெரியவந்தது. 

இதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருமணத்திற்கு முன்பே தன் சகோதரியை கர்ப்பமாக்கி அதன் பிறகு வாழ்க்கைக்காக போராட்டம் நடத்தி திருமணம்  செய்த அவரை எரித்துக் கொன்றவரை பழி தீர்க்க திட்டமிட்டதாக போலீசில் சத்ய கிளிண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்