கலைஞர் உணவகம் - தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
x
இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதாகவும், வருங்காலத்தில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு உணவகத்திற்கு மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுவதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்