திடீரென தீப்பிடித்த கார் - உயிர்தப்பிய குடும்பம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரின் முன்பகுதியில் கரும்புகை வருவதை பார்த்து ஓட்டுநர் ரவி, வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். காற்றின் வேகத்திற்கு ஏற்ப நெருப்பு பரவியதால் கார் முழுவதும் எரிந்து சேதமானது. உரிய நேரத்தில் ஓட்டுநர் ரவி காரை சாலையோரம் நிறுத்தியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்