கணித ஆசிரியர் திடீர் தற்கொலை - மாணவி தற்கொலையில் தொடர்பா?

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அப்பள்ளியின் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
x
கோவையில் ஆசிரியர் பாலியல் தொந்தரவால் மாணவி உயிரிழந்த நிலையில் கரூரை சேர்ந்த 12 ம் 
வகுப்பு மாணவியும் கடந்த 19 ஆம் தேதி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படை  குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை பள்ளிக்கு வந்த சரவணன், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லையென கூறி விடுப்பில் சென்றுள்ளார். ஆனால் தனது தந்தை வீட்டிற்கு செல்லாத சரவணன், தனது மாமனார் வீடு இருக்கும் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டிக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் தனி அறையில் தூக்கிட்டு சரவணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவியின் தற்கொலைக்கும், கணித ஆசிரியர் தற்கொலைக்கும் ஏதும் தொடர்புள்ளதா? 
மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசாரின் விசாரணை திசை திரும்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்