விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள்; "கூலியும் மிச்சம் ஆகிறது" - தமிழக விவசாயிகள் கருத்து
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், வீரராக்கியம், கட்டளை, லாலாபேட்டை, மகாதானபுரம், மாயனூர், மணவாசி உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்யிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அங்கு, வழக்கமாக அப்பகுதி மக்களே நடவுப் பணிகளில் ஈடுபடும் நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்கள், 2 நாட்கள் நடவுப் பணியை ஒரே நாளில் முடிப்பதாகவும், இதனால் கூலியும் மிச்சம் ஆவதாகவும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறி உள்ளனர்.
Next Story