"ஒற்றை கலாசாரத்தை கொண்டு வர பாஜக முயற்சி"- திருமாவளவன் குற்றச்சாட்டு
தேசிய கல்வி கொள்கை மூலம் ஒரே தேசம் ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை மூலம் ஒரே தேசம் ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்சியில் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித் திட்டம் என்ற நூலை திருமாவளவன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசு புதிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் ஒரே தேசம் ஒரே கல்வி எனும் திட்டத்தை கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வரும் வகையில் குழந்தைகளில் இருந்து தொடங்க வேண்டும் என தொலைநோக்கு பார்வையுடன் பாஜக செயல்படுவதாக தெரிவித்தார்.
Next Story