நீரை வெளியேற்ற பம்புகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு

கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நீரை வெளியேற்ற பம்புகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு
x
கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை பெய்தால் நீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறினார். சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஏற்கெனவே தெரிய வந்துள்ளதால், பம்புகள் மூலம் விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படும் என்றார். மேலும், 700 இடங்களில் நீர் வெளியேற்றும் பம்புகளும், அடைப்புகளை அகற்றும் கருவிகளும் தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்