"அரசு வேலை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்" - குகன் பிரசாத் (பூமிநாதனின் மகன்)

ஆடு திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி காவல் துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
x
ஆடு திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி காவல் துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், கடந்த 21ம் தேதி அதிகாலை வாகன சோதனையின் போது, தப்பிச் செல்ல முயன்ற ஆடு திருடர்களைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில், திருடர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில், பூமி நாதனின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூமிநாதனின் மகன் குகன் பிரசாத், விரைவில் அரசு வேலை வழங்குவதாஅக்த் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
 


Next Story

மேலும் செய்திகள்