இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் - "தமிழக அரசு ரூ.317 கோடி ஒதுக்கீடு"

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் - தமிழக அரசு ரூ.317 கோடி ஒதுக்கீடு
x
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையை  அடுத்த புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள 106இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக முகாமில் உள்ளவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்