கார் ஓட்டுநரிடம் நூதன முறையில் ரூ.1.10 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை

சென்னை பீர்கங்கரணையில் காரியில் இருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் ஓட்டுநரிடம் நூதன முறையில் ரூ.1.10 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை
x
புது பெருங்களத்தூர் சேர்ந்தவர் முருகேசன். கார் ஓட்டுநரான இவர், நகையை வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபாயை காரில் எடுத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல், பீர்கங்கரணை பகுதியில் காரை வழிமறித்து காரிலிருந்து பணம் கீழே விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.அப்போது, முருகேசன் அந்த நபரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு நபர் காரின் கதவை திறந்து பணத்தை திருடியுள்ளார். பின்னர், இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச்செல்ல முருகேசன் பீர்கங்கரணை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்