சரமாரியாக தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்; இணையத்தில் பரவி வரும் வீடியோ - பரபரப்பு
மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், முன்விரோதம் காரணமாக திடீரென பேருந்து நிலையத்தில் மோதிக் கொண்டனர். ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இதை ஆதாரமாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story