"நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம்" - கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம் - கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. அங்கு, 862 பேர் 5 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளனர். இதில், 461 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடன் தள்ளுபடி கிடைக்கும் என காத்திருந்த பெண்கள், பாரபட்சம் காட்டுவதாக கூறி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டதுடன், அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்