கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில் தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்
x
திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியின் தாளாளரும், அமமுக நிர்வாகியுமான ஜோதிமுருகன் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் மாணவிகள் நடத்திய தொடர் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. இதனிடையே விடுதியின் வார்டன் அர்ச்சனா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவானார். அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் சரணடைந்தார். இவர் மீது 3 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்