75 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

மதுரையில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீற முயன்று கடைசியில் கொலையாளி ஆகியிருக்கிறார்
75 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
x
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் சாலையோரம் 75 வயதான மூதாட்டி வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள கடைகளில் யாசகம் பெற்று வந்த அவர், இரவு நேரங்களில் அந்த பகுதியில் சாலையோரம் படுத்து உறங்குவது வழக்கம். சம்பவத்தன்று அதுபோல் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவர் மூதாட்டியின் அருகே வந்துள்ளார். அப்போது திடீரென மூதாட்டியை தூக்கிச் சென்ற அவர், அவரிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது அந்த மூதாட்டி எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்த நபர், மூதாட்டியை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் தெளிவாக தெரியவே, இதை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கண்காணித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், மணிமாறனை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இளம்பெண் என நினைத்து மூதாட்டியை தூக்கிச் சென்றதாக போலீசில் அவர் தெரிவித்துள்ளார். கைதான மணிமாறன் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. சிறையில் இருந்த அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் மூதாட்டியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்