குடும்பத்தகராறு காரணமாக மனைவி தற்கொலை - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பனையடிப்பட்டி கிராமத்தில் ஆசிர்வாதம் என்பவர் தனது மனைவி ரஞ்சிதம் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆசிர்வாதத்திற்கு இருந்த தொடர் குடிப்பழக்கம், வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு காரணமாக அவருக்கும் மனைவி ரஞ்சிதத்திற்கும் இடையே தொடர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ரஞ்சிதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஆசிர்வாதத்தை கைது செய்துள்ளனர்.
Next Story