வாகனம் மோதியதில் ஆய்வாளர் உயிரிழப்பு - நிற்காமல் சென்ற வாகனம் சிக்கியது

கரூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வேன் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில் அடையாளம் தெரியாத வேன், பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் பிடிபட்டது.
வாகனம் மோதியதில் ஆய்வாளர் உயிரிழப்பு - நிற்காமல் சென்ற வாகனம் சிக்கியது
x
வெங்கக்கல்பட்டி பகுதியில் உள்ள கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை சிசிடிவி காட்சிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் பஞ்சப்பட்டி பகுதியில் இருந்து கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றி வரும் வேன் ஒன்று தான் ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது என தெரியவந்தது. இதையடுத்து 16 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அந்த வேன் சிக்கியது. அந்த வேனை ஓட்டிச் சென்ற சுரேஷ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்