"ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசு" - முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசு - முதலமைச்சர் ஸ்டாலின்
x
கோவையில், வீட்டுவசதி, கூட்டுறவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 646 புள்ளி 61 கோடி மதிப்பில், 25 ஆயிரத்து 123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  அதை தொடர்ந்து 89 புள்ளி 73 கோடி ரூபாய் மதிப்பில் 128 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், 587 புள்ளி 91 கோடி ரூபாய் மதிப்பில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்திலும் தலை சிறந்த மாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்