திருச்சி அகோரி மணிகண்டன் பெண் அகோரியை திருமணம் செய்தார்

திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் சடலங்கள் மீது அமர்ந்து வினோத பூஜைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அகோரி, தனது சிஷியையான பெண் அகோரி பிரியங்காவை திருமணம் முடித்துள்ளார்.
திருச்சி அகோரி மணிகண்டன் பெண் அகோரியை திருமணம் செய்தார்
x
திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் சடலங்கள் மீது அமர்ந்து வினோத பூஜைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அகோரி, தனது சிஷியையான பெண் அகோரி பிரியங்காவை திருமணம் முடித்துள்ளார். திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன்... காசி சென்று அகோரி பயிற்சிபெற்ற அவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலை கட்டி பூஜை நடத்தி வருகிறார்.இவர் அண்மையில் சுடுகாட்டில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜையை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டும் அகோரி மணிகண்டன் இறந்த தனது தாயார் உடல் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து பூஜை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜை நடத்துவதை வழக்கமாக கொண்ட அகோரி மணிகண்டனிடம், கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண், கடந்த 8 ஆண்டுகளாக அகோரியாக பயிற்சி பெற்றுள்ளார். 
இந்நிலையில் மணிகண்டனுக்கும், சிஷியை பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.காளி கோவிலில் பிற அகோரிகள் மேளம் அடிக்க, சங்கொலி, ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க இரு அகோரிகளும் திருமணம் செய்துக்கொண்டனர்.  அகோரி கோலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை அகோரி மணிகண்டனின் குருவான மதுரை பால்சாமி என்பவர் நடத்திவைத்தார். திருமணம் முடிந்ததும் யாகம் நடத்திய அகோரிகள், சிறப்பு பூஜைகளையும் நடத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்