சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டரைக் கல்லால் தாக்கி - சிறுமியின் தாய் மாமன், அத்தை கைது

கடையநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், பெயிண்டரைக் கல்லால் தாக்கி கொலை செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டரைக் கல்லால் தாக்கி - சிறுமியின் தாய் மாமன், அத்தை கைது
x
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவைச் சேர்ந்த கோபால் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்திரா நகர் பகுதியில் கோபால் வேலைக்காக சென்ற போது, அங்கு வந்த சிறுமியின் மாமா மாரி பாண்டியும், அத்தை வேலத்தாயும், சிறுமியை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, கோபாலுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றிய வாக்கு வாதத்தால், அத்தை வேலத்தாய் கோபாலைக் கம்பால் தாக்கியுள்ளார். ஆத்திரம் தீராத தாய் மாமன் மாரி பாண்டி, கோபாலின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகத் தாக்கியதில், கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவான கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்