"கேப்டன் தோனி..." ஒன்ஸ்மோர் கேட்க சொன்ன ஸ்டாலின்
4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி, அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதேபோல இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முதலில் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் நிர்வாக தலைவர் பிரிஜேஷ் படேல், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர். விழாவின் தொடக்கத்திலே ஸ்டாலின் பெயர் மற்றும் தோனியின் விருப்ப எண்ணான 7 என்ற எண் பொறித்த ஜெர்சியை தோனி, முதலமைச்சருக்கு வழங்கி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் சிஎஸ்கே வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Next Story
