தமிழகத்தில் 10 புதிய கலை,அறிவியல் கல்லூரிகள் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 புதிய கலை,அறிவியல் கல்லூரிகள் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த கல்வி ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதியதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இதர செலவினங்களுக்காக 24 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிருப்பதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்