சிறுமியை எரித்த வளர்ப்பு தந்தை - சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்
நெல்லை அருகே சிறுமியை வளர்ப்பு தந்தை எரித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் தன் 2ஆம் மனைவி சுஜா மற்றும் அவரின் 3 பிள்ளைகளோடு நெல்லை மாவட்டம் காவல் கிணறு பகுதியில் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே சுஜாவின் மகளான 10 வயதான மகேஸ்வரி என்ற சிறுமி கடையில் திருடியதாக கூறப்படுகிறது. இதனை கடைக்காரர் அந்தோணிராஜிடம் சொன்னதால் ஆத்திரமடைந்த அவர், மண்ணெண்ணெயை எடுத்து வளர்ப்பு மகள் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிறுமி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை அந்தோணிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story