திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நரிக்குறவர்; உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர் சக்திவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நரிக்குறவர்; உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
x
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர் சக்திவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரை போலீசார் கடந்த 14ஆம் தேதி திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், மூவரையும் காணாமல் 4 நாட்களாக தேடி அலைந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனிடையே, திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரகாஷ் மற்றும் தர்மராஜை முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் நள்ளிரவில் சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உளுந்தூர்பேட்டை சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் சக்திவேல் உடல்நலக் குறைவு காரணமாக, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், போலீசார் அடித்ததால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்