வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை - 10 வயது மகளை தீ வைத்து எரித்த தந்தை

நெல்லை அருகே 10 வயதான வளர்ப்பு மகளை தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை - 10 வயது மகளை தீ வைத்து எரித்த தந்தை
x
நெல்லை அருகே 10 வயதான வளர்ப்பு மகளை தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ், நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வசித்து வந்தார். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் சுஜா என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே திருமணமான சுஜாவுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் அந்தோணிராஜை திருமணம் செய்து தன் பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளார். இதில் 10 வயதான மகள் மகேஸ்வரி வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என கூறி அந்தோணிராஜ் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று ஆத்திரமடைந்த அவர், திடீரென மகேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், தன்னை காப்பாற்றும்படி அந்தோணிராஜின் காலை பிடித்து கதறியுள்ளார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்படவே, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளர்ப்பு தந்தையே மகளை கொடூரமாக எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்