"பொங்கலுக்கு ரூ.2,500 நிதி வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

நிதியுதவி இல்லாத பொங்கல் பரிசை திமுக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
நிதியுதவி இல்லாத பொங்கல் பரிசை திமுக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரகளுக்கு1000 ரூபாயும், 2021ம் ஆண்டு 2500 ரூபாயுமாக நிதியுதவி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு திமுக அரசு, நிதியுதவி இல்லாமல் பொங்கல் பரிசை அறிவித்திருப்பது வாக்களிக்கும் மக்களை வஞ்சிக்கும் செயல் என்றார்.  மேலும், வரும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்