பொங்கல் தொகுப்பு - அரசு அறிவிப்பு

20 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் தொகுப்பு  - அரசு அறிவிப்பு
x
20 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாட, 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பை வழங்குவது தொடர்பான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். 

அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் 
முகாம்களில் வசிப்போருக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

88 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அரசு, இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்