இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
x
இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த சுமன் ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர்,  வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த‌தாகவும், ஆனால் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் செய்த‌தாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சுரேஷ்குமார் காட்டுப்புதூர் பகுதியில் மர்ம‌மான முறையில் உயிரிழந்த‌தாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் வந்த வழக்கில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சுரேஷ்குமார் பூச்சி மருந்து வாங்கியதாக கூறப்படும் சி.சி.டி.வி பதிவுகளை மனுதாரருக்கு காண்பிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை குறித்து கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்