"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஒடுக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம் எனவும் குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர்கள், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம் என்று கூறிய அவர் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும் என்றும், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story