ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம் - கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு கோயிலில், குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது.
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம் - கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம்
x
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குருபகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அப்போது, குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்