மணிமுக்தா அணை நீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணை நீர் திறப்பு அதிகரிப்பால், 2 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிமுக்தா அணை நீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
கள்ளக்குறிச்சியில் 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது.  தற்போது, அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு ஆயிரத்து 570 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடலூர் மாவட்டத்திற்கும் தண்ணீர் செல்லும் என்பதால்,  கள்ளக்குறிச்சி, கடலூர்  என 2 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்